சிர்மூர் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

சிர்மூர் இராச்சியம்
Remove ads

சிர்மூர் (Sirmur) (also spelled as Sirmor, Sirmaur, Sirmour or Sirmoor) இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆண்டனர்.[1]

விரைவான உண்மைகள்
Thumb
சிர்மூர் மன்னர் கிராத பிரகாஷ், ஆண்டு 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி
Thumb
சிர்மூர் இராச்சியத்தின் தலைநகரம் நஹான்
Thumb
1800களில் சிர்மூர் இராச்சியம் வெளியிட்ட அஞ்சல் தலை

இமயமலையில் அமைந்த சிர்மூர் இராச்சியம் 1198 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த இராச்சியத்தின் 1891 ஆம் ஆண்டு வருவாய் 300,000 ரூபாய் ஆகும்.

Remove ads

வரலாறு

கோர்க்கா மன்னர் ராணா பகதூர் ஷாவின் ஆட்சிக் காலத்தில், சிர்மூர் இராச்சியம், கார்வால் மற்றும் குமாவுன் பகுதிகளை வென்று நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

பின்னர் பொ.ஊ. 1814–16ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவின் போது ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றிருந்த சிர்மூர் இராச்சியம் உட்பட கார்வால், குமாவுன் மற்றும் சிக்கிம் பகுதிகள் பிரித்தானிய இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

சிர்மூர் இராச்சியம் 1816 முதல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசிற்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானமாக, இந்திய விடுதலை வரை இருந்தது. பின்னர் 1948ல் சிர்மூர் இராச்சியம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

Remove ads

ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் மன்னர் பெயர், ஆட்சித் துவக்கம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads