சுந்தரபாண்டியன்பட்டினம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுந்தரபாண்டியன்பட்டினம் (எஸ் பி பட்டினம்), இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். வங்காள விரிகுடா கடற்கரை கிராமமான சுந்தரபாண்டியன்பட்டினத்தின் அஞ்சல் சுட்டு எண் 623406 ஆகும். தொலைபேசி குறியீடு எண் 04561 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் கடல் மீன் பிடித்தல் ஆகும்.

இக்கிராமம் திருவாடானையிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும்; இராமநாதபுரத்திற்கு வடக்கே 75 கி.மீ. தொலவிலும் உள்ளது.

சுந்தரபாண்டியன்பட்டினம், திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகமைந்த கிராமங்கள் வட்டானம், நிலமழகியமங்கலம், ஓரியூர், பாசிப்பட்டினம், கட்டிவயல் ஆகும். அருகில் அமைந்த சிற்றூர்கள்: தொண்டி, மற்றும் திருவெற்றியூர் ஆகும். அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை, பேராவூரணி, காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகும்[1]

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சுந்தரபாண்டியன்பட்டினத்தின் மொத்த மக்கள்தொகை 4,007 ஆகும். இதில் இசுலாமியர்கள் 83.88% ஆகவும்; கிறித்துவர்கள் 13.75% ஆகவும்; இந்துக்கள் 1.92% ஆகவும், பிறர் 0.45% ஆகவும் உள்ளனர்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads