ண்
247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று ண் (ⓘ) ஆகும். இது தமிழ் நெடுங்கணக்கில் பத்தொன்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ணகர மெய்" அல்லது "ணகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இண்ணன்னா" என வழங்குவர். ண், ன் ஆகிய எழுத்துகளிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு.
Remove ads
"ண்" - வகைப்பாடு
தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ண் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழ் எழுத்துகளில் மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ண் மெல்லின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, மென்மையான ஓசை உடையது ஆதலால் மெல்லின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.
Remove ads
இனவெழுத்துக்கள்
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒலியின் பிறப்பிடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ட், ண் என்னும் இரண்டும் நாக்கின் நுனி மேல்வாயின் முன் பகுதியைப் பொருந்த உருவாவதால் ட், ண் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று இன எழுத்தாக அமைகின்றன.[2].
குறிப்புகள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads