தத்தா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தத்தா வம்சம் (Datta dynasty), இவ்வம்சத்தவர்கள் வட இந்தியாவின் மதுரா மற்றும் அயோத்தி பகுதிகளை கிமு முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர்.[2] தத்தா வம்சாத்தவர்கள் தேவா வம்சத்தவர்களை வென்று அயோத்தி பகுதிகளை தங்களது மதுரா இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இரண்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மித்திர வம்சத்தினர், தத்தா வம்சத்தவர்களை வென்று மதுரா மற்றும் அயோத்தியை ஆட்சி செய்தனர்.


யவன இராச்சியக் கல்வெட்டுகளின்படி, இந்திய கிரேக்க இராச்சியத்தினர் (கிமு 150 - 50) மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த போது, அயோத்தி மற்றும் மதுரைவை ஆண்ட தேவா வம்சத்தினர், தத்தா வம்சத்தினர் மற்றும் மித்திர வம்சத்தினர் கிரேக்கரகளுக்கு திறை செலுத்தி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர்.[3] இந்தோ-கிரேக்க இராச்சியத்தை பின்னர் இந்தோ-சிதியர்கள், வடக்கு சத்திரபதிகள் மற்றும் குசானர்கள் வென்றனர்.
Remove ads
தத்தா வம்ச ஆட்சியாளர்கள்
தத்தா வம்சத்தின் அறியப்பட்ட ஆட்சியாளர்கள்:[4]
- சேஷ தத்தா
- இராம தத்தா
- சிசுசந்திர தத்தா
- சிவ தத்தா
- உத்தம தத்தனின் நாணயம்
- புருசோத்தம தத்தாவின் நாணயம்
- இராம தத்தாவின் நாணயம்
இதனையும் காண்க
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads