வடக்கு சத்திரபதிகள்

From Wikipedia, the free encyclopedia

வடக்கு சத்திரபதிகள்
Remove ads


வடக்கு சத்ரபதிகள் அல்லது மதுராவின் சத்திரபதிகள் (Northern Satraps , or Satraps of Mathura)[1] இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகள் ஆவார். வடக்கு சத்திரபதிகள் சகலா மற்றும் மதுரா நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

விரைவான உண்மைகள் வடக்கு சத்திரபதிகள், தலைநகரம் ...

மேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட மேற்கு சத்திரபதிகளும், வடக்கு சத்திரபதிகளும் சமகாலத்தவர்களே. வடக்கு சத்திரபதிகள் பௌத்தம், சமண மற்றும் இந்து சமயங்களையும் ஆதரித்ததுடன், பல நினைவுச் சின்னங்களை எழுப்பியும், தங்களது உருவம் பொறித்த நாணயங்களைய்ம் வெளியிட்டனர்.

பின்னர் மதுராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குசானப் பேரரசர் வீம கட்பீசஸ் மற்றும் கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில், வடக்கு சத்திரபதிகள் வெல்லப்பட்டு, குசானப் பேரரசில் சத்திரபதிகள் எனும் மாகாண ஆளுநர்களாக பணிபுரிந்தனர். எனவே வரலாற்று ஆசிரியர்கள், வட இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதியர்களுக்கு வடக்கு சத்திரபதிகள் எனப்பெயரிட்டனர்.

Thumb
வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா உருவம் பொறித்த நாணயம்
Thumb
வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா மற்றும் உறவினர்கள் பெயர் பொறித்த மதுரா சிங்கத் தூண்][2]
Thumb
வடக்கு சத்திரபதி பாதயாசாவின் நாணயம்


Thumb
வடக்கு சத்திரபதி சோடசாவின் கல்வெட்டு[3]


Thumb
பெரும் சத்திரபதி காரபல்லானா மற்றும் சத்திரபதி வனஸ்பரா பெயர் பொறித்த பால போதிசத்துவர் சிலை, காலம் கிபி 123
Remove ads

மதுராவின் சிங்கத் தூண்

வடக்கு சத்திரபதிகளின் மன்னர் நிறுவிய மணற்கல் மதுரா சிங்கத் தூண் மதுராவில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [4] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[5] [6]

இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [7]

இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [8]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

Remove ads

இந்து சிற்பங்கள்

யட்சினி சிற்பம்

மோரா சிற்பங்கள் (கிபி 15)
Thumb
Thumb
பெரும் சத்திரபதி சோடசாவின் மோரா மோரா சிற்பங்கள் (கிபி 15), விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[10] இடது: விருஷ்ணி குல நாயகனின் உடற்பகுதி சிற்பம், கிபி:15[11][12][13][14] வலது: விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[15]
Remove ads

சமண நினைவுச் சின்னங்கள்

சமண நினைவுச் சின்னங்கள்

மன்னர் சோடசாவின் கங்காளி திலா கற்பலகை சிற்பம்
Thumb
மன்னர் சோடசாவின் கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை, கிபி 15[15]
பிராமி எழுத்துமுறை கல்வெட்டு கற்பலகை சிற்பம்:

மகாசத்திரபதி சோடசா"

மகாசத்திரபதி சோடசா காலத்தில் (கிபி:15) கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை மற்றும் சமண சமய சிற்பங்கள் மற்றும் சிற்பத்தூண்கள் மதுராவின் சமணக் கோயில்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[16] [17]


வனப்பெழுத்துகள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும் - கிபி முதலாம் நூற்றாண்டிலும்)

Thumb
இந்தோ சிதியர்களான மேற்கு சத்திரபதி மன்னர்கள் வட இந்தியாவில் அறிமுகம் செய்த வனப்பெழுத்துகளின் மாதிரி, மதுரா, கிபி 15[3][31]

Svāmisya Mahakṣatrapasya Śudasasya
"Of the Lord and Great Satrap Śudāsa"[32][33]


இந்தோ சிதியர்களான மேற்கு சத்திரபதி மன்னர்கள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும், கிபி முதலாம் நூற்றாண்டிலும், வட இந்தியாவில் வனப்பெழுத்தில் பிராமி எழுத்துகள் கல்வெட்டுகளில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். [31]

கௌதம புத்தரின் முதல் சிற்பம் (கிபி 15 முதல்)

Thumb
அமர்ந்த நிலையில் கௌதம புத்தர் சிற்பம், இசாபூர், காலம், கிபி 15[34]

சாஞ்சி மற்றும் பர்குட் போன்ற இடங்களில் காணப்படாத கௌதம புத்தரின் முதல் சிற்பத்தை, மேற்கு சத்திரபதிகள் கிபி 15-இல் மதுராவில் வடித்தனர்.

பிற சிற்பங்கள்
Thumb
இந்திரசீல குகையில் இந்திரன் கௌதம புத்தரை வணங்கும் சிற்பம், கிபி 50-100 [16]
Thumb
இந்திரசீல குகையில் போதி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கௌதம புத்தரை, இந்திரன் முதலான் தேவர்கள் வழிபடும் சிற்பங்கள், கிபி 50-100, குசானர் காலத்திற்கு முந்தியது[16][35][16]

ராஜகிரகம் அருகே இந்திரசீல குகையில் இந்திரன், கௌதம புத்தரை வணங்கும் சிற்பங்களையும், போதி மரத்தடி புத்தரின் பல சிற்பங்களையும் வடக்கு சத்திரபதி மன்னர்கள் கிபி 50 - 100 காலத்தில் நிறுவினர்.[16]

Remove ads

இந்து தேவதைகளின் சிற்பங்கள்

Thumb
கௌதம புத்தருக்கு பணிவிடை செய்யும் இந்திரன், பிரம்மா, சூரியன் மற்றும் மித்திர தேவர்கள் சிற்பம், காலம் கிபி 50 - 100

வடக்கு சத்திரபதிகளின் ஆட்சியின் துவக்கத்தில் மதுராவில் விருஷ்ணி குலத் தலைவர்களின் சிற்பங்கள், யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்களை வடிக்கப்பட்டது.[36] வேத கால கடவுளர்களான இந்திரன், பிரம்மா, சூரியன், மித்திரன் போன்றவர்கள், கௌதம புத்தருடன் தொடர்புருத்தி இந்திரசீல குகையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது[36] T

துவக்க கால அதிகாரப்பூர்வ கபர்தின் சிலை
Thumb
பெண் சத்திரபதி நம்பதா பெயரில் நிறுவப்பட்ட கட்ரா கௌதம புத்தரின் உடைந்த சிலை ( Naṃdaye Kshatrapa).[37][38][39]
Thumb
மேற்கு சத்திரபதிகளின் கல்வெட்டுகளுடன் கூடிய கட்ரா போதிசத்துவர் சிலை [37]
Remove ads

வடக்கு சத்திரபதி ஆட்சியாளர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆட்சியாளர், படிமம் ...
Remove ads

இதனையும் காண்க

வடக்கு சத்திரபதிகள் வெளியிட்ட நாணயங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads