தரங்கம்பாடி

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

தரங்கம்பாடிmap
Remove ads

தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் 4 பேரூராட்சிகளில் ஒன்றாகும்.[3] தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது. தரங்கம்பாடி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Thumb
தரங்கம்பாடியில் உள்ள டச்சுக் கோட்டை

தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது. டேனீஷ் காரர்களின் கோட்டை இன்றும் உள்ளது.

Remove ads

அமைவிடம்

காவேரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்தில், காரைக்காலுக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் மயிலாடுதுறை 31 கி.மீ.; சீர்காழி 31 கி.மீ. தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்காலில் உள்ளது.

சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும் பேருந்துகள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.

Remove ads

பேரூராட்சியின் அமைப்பு

13.06 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 172 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5482 வீடுகளும், 23,191 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads