திருமயிலை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமயிலை தொடருந்து நிலையம் (Thirumayilai railway station) அல்லது மைலாப்பூர் தொடருந்து நிலையம் என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது 1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சென்னை பறக்கும் தொடருந்து திட்டத்தின் முதல் கட்டத்தில் நிறைவு செய்யப்பட்டது.[1] இந்த நிலையம் பக்கிங்காம் கால்வாயின் கரையில் அமைந்துள்ளது. லசு முனையத்திற்கு அருகிலுள்ள இராமகிருஷ்ணா மடத்துச் சாலையிலிருந்து இந்நிலையத்தினை அணுகலாம். ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர். வி. என். எல்) அலுவலகம் மற்றும் தெற்கு ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஆகியவையும் இந்த நிலைய கட்டிடத்தில் உள்ளன.[2] நிலைய கட்டிடம் இதன் அடித்தளத்தில் 1050 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[3] இந்த நிலையம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13.540 மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
நிலைய அமைப்பு
ஜி. | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவு |
எல்1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு மாடம், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
எல்2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்![]() | |
நடைமேடை 2 வடக்கு நோக்கி |
சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம்-முண்டகக்கண்ணியம்மன் கோயில் | |
நடைமேடை 1 தெற்கு நோக்கி |
வேளச்சேரி நோக்கிஅடுத்த நிலையம்-மந்தைவெளி (எதிர்காலத்தில் பரங்கிமலை நிலையத்திற்கு மேலும் நீட்டிக்கப்படும்) | |
பக்க மேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்![]() | ||
எல்2 | ||
Remove ads
வளர்ச்சி
செப்டம்பர் 2013இல், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ. ஆர். சி. டி. சி) திருவன்மியூர், வேளச்சேரி ஆகிய இரண்டு நிலையங்களுடன் இந்த நிலையத்தில் உணவு வளாகத்தை அமைப்பதற்கான விலைப்புள்ளிகளை கோரியது.[4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads