மந்தைவெளி தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மந்தைவெளி தொடருந்து நிலையம் (Mandaveli railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மந்தைவெளியில் வெங்கடகிருஷ்ணா சாலையின் குறுக்கே அமைந்துள்ள இது பிரத்தியேகமாக சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தில் சேவை செய்யும் நிலையமாகும்.
Remove ads
வரலாறு
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மந்தைவேலி நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது.[1]
நிலைய தளவமைப்பு
மந்தைவெளி தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்டு பக்கிங்காம் கால்வாயின் இரு கரைகளையும் உள்ளடக்கியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன. நடைமேடை ஒவ்வொன்றும் 280 மீட்டர் நீளம் கொண்டவை.[2] நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 1,900 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்தினைக் கொண்டுள்ளது.
ஜி. | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவு |
எல்1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
எல்2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்![]() | |
நடைமேடை 2 வடக்கு நோக்கி |
சென்னை கடற்கரை நோக்கி
அடுத்த நிலையம்-திருமயிலை | |
நடைமேடை 1 தெற்கு நோக்கி |
வேளச்சேரி நோக்கி
அடுத்த நிலையம்-பசுமைவழிச் சாலை (விரைவில் பரங்கிமலை தொடருந்து நிலையத்திற்கு மேலும் நீட்டிக்கப்படும்) | |
பக்க மேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்![]() | ||
எல்2 | ||
வேளச்சேரி செல்லும் இந்த வழித்தடத்திலும் வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையிலும் ஒன்பதாவது நிலையமாக மந்தைவெளி தொடருந்து நிலையம் உள்ளது.[3]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads