தொண்டைமான் இளந்திரையன்
இளந்திரையன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவர். இவரது தலைநகர் காஞ்சி. தொண்டை மண்டலம் சங்ககால தமிழகத்தில் ஒரு பகுதியாக இருந்தது. தொண்டைமான் இளந்திரையன் ஒரு சங்ககால தமிழ் மன்னன். திருமலை, திருப்பதி, திருத்தணி, வள்ளிமலை, திருக்காளத்தி , காஞ்சிபுரம், வேலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சித்தூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம் மற்றும் கல்வராயன் மலை ஆகிய இந்த இருபது பகுதிகளும் தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த சங்ககால தமிழ் மன்னன் தொண்டைமான் இளந்திரையன் கட்டுப்பாட்டில் இருந்தது.
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், இவரின் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
- கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
- இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
- மள்ளருக்கு மள்ளன் (உழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவர் போற்றப்பட்டுள்ளார்.
- பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைத்துள்ளார்.
- சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த தாமரை விருது சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார்.
- விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவித்துள்ளார்.
Remove ads
காண்க
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads