தோஸ்த் நடவடிக்கை

இந்தியாவின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை From Wikipedia, the free encyclopedia

Remove ads

தோஸ்த் நடவடிக்கை (Operation Dost), துருக்கி-சிரியா நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இந்திய அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளைக் குறிக்கிறது.[1]6 பிப்ரவரி 2023 அன்று துருக்கி நாட்டின் காசியான்டெப் நகரத்திற்கு மேற்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கொண்டிருந்தது.[2]

சொற்பிறப்பு

தோஸ்த் என்பதற்கு இந்தி மொழி[3] மற்றும் துருக்கிய மொழியில்[4] நண்பன் எனப்பொருளாகும்.

தோஸ்த் நடவடிக்கைகள்

Thumb
இந்திய வான்படை வானூர்தியில் நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் துருக்கிக்குச் சென்ற இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படைகள்

6 பிப்ரவரி 2023 அன்று காலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வருத்தம் தெரிவித்ததுடன், துருக்கி மற்றும் சிரியாவுடன் இந்தியாவின் ஒற்றுமையை தெரிவித்தார்.[5] அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சரவைக் குழு, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வானூர்தி அமைச்சகம் மற்றும் சுகாரதார அமைச்சகங்களுடன் கலந்து பேசினார்.[6]

நிலநடுக்கம் ஏற்பட்ட 12 மணி நேரத்தில் இந்திய இராணுவம் நிவாரணப் பொருட்களுடன், மீட்புக் குழுக்கள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு செல்வதற்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டது.[7]

துருக்கியில் மீட்பு நடவடிக்கைகள்

Thumb
துருக்கியின் காசியான்டெப் நகரத்தில் கட்டிட இடுபாடுகளிடையே இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படைகளின் மீட்புப் பணிகள்

துருக்கி நிலநடுக்கத்தின் போது உதவிட வந்த நாடுகளில் முதலாவாக உதவிக்கரம் நீட்டியது இந்தியா என துருக்கி குறிப்பிட்டுள்ளது.[8]நிலநடுக்கம் ஏற்பட்ட 6 பிப்ரவரி 2023 அன்று மாலையே இந்திய மீட்புக் குழுவினர், நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டனர். [9]பாதிக்கப்பட்ட அடானா நகரத்திற்கு இந்திய வான்படையின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்தி மூலம், நிவாரணப் பொருட்கள், மோப்ப நாய்களுடன் 47 மீட்புப் படையினர் சென்றடைந்தனர்.[10]

Thumb
இந்திய வான் படை மூலம் இராணுவ மருத்துவக் குழுவினரை வானிலிருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இறக்கி விடும் காட்சி, நாள் 7 பிப்ரவரி 2023

நிலநடுக்கதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் பிற உதவிகளை ஆளில்லாத வானூர்திகள் மூலம் வழங்கினர்.[11]தேசியப் போரிட மீட்புப் படையினர் கட்டிட இடுபாடுகளை அகற்றும் கருவிகளை கருவிகளைக் கொண்டு, கட்டிட இடுபாடுகளில் சிக்கிய மக்களை வெளியே கொண்டு வந்தனர்.[12]

7 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படை நிவாரணப் பொருட்கள், நகரும் மருத்துவமனை, மீட்புக் குழுவினருடன் மேலும் இரண்டு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளை துருக்கிக்கு அனுப்பியது.[13][14]மீட்புக் குழுவினருடன் ஆக்ராவை மையமாகக் கொண்ட இராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை, உடற்பரிசோதனை கருவிகளுடன் அனுப்பப்பட்டனர்.[15]9 பிப்ரவரி 2023 வரை இந்தியா துருக்கிக்கு 6 போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III வானூர்திகளில் மீட்புப் படையினர் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பியது.[16][17]

ஏழாதுவ வானூர்தி, மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் துருக்கியின் அடானா நகரத்தின் வானுர்தி நிலையத்திற்கு 12 பிப்ரவரி 2023 அன்று சென்றடைந்தது.[18]

துருக்கியின் இஸ்கென்தெருன் நகரத்தில் தற்காலிக மருத்துவமனையை நிறுவிய பின்னர், நிவாரண பணிகளை முடித்துக் கொண்டு மருத்துக் குழுவினர் 20 பிப்ரவரி 2023 அன்று இந்தியா திரும்பினர்.[19][20]

சிரியாவில் மீட்பு நடவடிக்கைகள்

Thumb
சிரியாவிற்கான இந்திய தூதர் எஸ். கே. யாதவ் (இடது) மற்றும் சிரியா உள்ளாட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் மௌதாஸ் தௌவாஜி (வலது)

சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக சிரியாவுக்கான மீட்புப் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 8 பிப்ரவரி 2023 அன்று 6 டன் அளவிற்கு அவசர கால மருத்துவ நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்கஸ் வானூர்தி நிலையத்திற்கு இந்திய வானூர்தி சென்றடைந்தது. [21]

12 பிப்ரவரி 2023 அன்று இந்திய வான் படையின் சரக்கு விமானங்கள் 23 டன் நிவாரணப் பொருட்களுடன் டமாஸ்மஸ் வானூர்தி நிலையத்திற்கு சென்றது.[22]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads