நான்கு கில்லாடிகள்

1969 இந்திய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நான்கு கில்லாடிகள்
Remove ads

நான்கு கில்லாடிகள் (Naangu Killadigal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் நான்கு கில்லாடிகள், இயக்கம் ...
Remove ads

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

தங்களது குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனையில் இருந்து மீண்டுவரும் நான்கு நண்பர்கள் திரைப்படம் எடுத்து தம் குடும்பத்திற்குப் பண உதவி செய்ய முயலுகின்றனர் . பிரம்மா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பில் இறங்குகிறார்கள். நரேந்திரன், சந்தோஷ்குமாரி என்னும் முன்னணி நடிகர்களை வைத்து ஒரு கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி படமும் எடுக்கின்றனர். சந்தோஷ்குமாரி, இயக்குநர் குமார் இருவருக்கும் இடையே காதல் மலருகிறது. சந்தோஷ்குமாரியை மணக்க விரும்பும் நரேந்திரன் தனது கையாள் மூலம் இயக்குநர் குமாரைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான். கொலை முயற்சி தோல்வியுற்று, நரேந்திரனும் அவன் கையாளும் கைது செய்யப்படுகிறார்கள். இயக்குநர் குமார் ஜெய்சங்கர், தயாரிப்பாளர் ஐயர் மனோகர், மேனேஜர் நடனம் தேங்காய் சீனிவாசன், பார்ட்னர் பாபு சுருளிராஜன் தங்கள் தயாரிப்பான "பூக்காரி" படத்தை வெளியிடுகிறார்கள். அந்த படத்தைத் தயாரித்து வெளியிட தாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு நால்வரும் சிறைக்குச் செல்கிறார்கள். படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் தமது குடும்பத்தாரைச் சந்தித்து சீக்கிரம் திரும்பி வருவதாக நான்கு நண்பர்களும் விடைபெறுகிறார்கள்.

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், ஏ. எல். நாராயணன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[2][3]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்(கள்) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads