இரா. சு. மனோகர்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (R. S. Manohar; 29 சூன் 1925 - 10 சனவரி 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
Remove ads
இளமைக்காலம்
இராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர், 1925-ஆம் ஆண்டு சூன் 29-ஆம் தேதி அன்றைய சேலம் மாவட்டம், ராசிபுரத்தில், பிரித்தானிய இந்தியா, சென்னை மாகாணத்தில் சுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.
Remove ads
குறிப்பிட்ட சில திரைப்படங்கள்
- லட்சுமி (1953)
- அதிசயப் பெண் (1959)
- வண்ணக்கிளி (1959)
- கைதி கண்ணாயிரம் (1960)
- வல்லவனுக்கு வல்லவன் (1965)
- ஆயிரத்தில் ஒருவன் (1965)
- வல்லவன் ஒருவன் (1966)
- இரு வல்லவர்கள் (1966)
- காவல்காரன் (1967)
- அடிமைப் பெண் (1969)
- உலகம் சுற்றும் வாலிபன் (1973)
- இதயக்கனி (1975)
- பல்லாண்டு வாழ்க (1975)
நாடகங்கள்
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 1987. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads