நைபியு ரியோ

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நைபியு ரியோ
Remove ads

நைபியு ரியோ (Neiphiu Rio, பிறப்பு 1950) இந்திய வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் தற்போதைய முதலமைச்சர். இவர் முதலமைச்சராக மார்ச்சு 6,2003 முதல் சனவரி 3,2008 வரையும் பின்னர் மார்ச்சு 12,2008 முதல் நடப்பு முதல்வராகவும் உள்ளார்.

விரைவான உண்மைகள் நைபியு ரியோ, நாகாலாந்து முதலமைச்சர் ...

இவர் கோகிமா மாவட்டத்திலுள்ள துபெமா கிராமத்தில் குயோலோலி ரியோவிற்குப் பிறந்தவர். தனது இளமைக் கல்வியை கோகிமா பாப்டிஸ்ட் ஆங்கிலப் பள்ளியிலும் புரூலியா சைனிக் பள்ளியிலும் கற்றார்.

ரியோ நாகாலாந்து மக்கள் முன்னணியின் உறுப்பினர். பாரதிய ஜனதா கட்சியின் மாநில கிளையுடனும் பிற நாகாலாந்து வட்டார கட்சிகளுடனும் "நாகாலாந்து சனநாயக கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து 2003ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றார். இது பத்தாண்டுகளாக தொடர்ந்து வந்த காங்கிரசின் ஆட்சியை முடிவுறச் செய்தது. ரியோ முன்னதாக காங்கிரசு கட்சியில் இருந்தபோது எஸ். சி. ஜமீரின் தலைமையில் அமைந்திருந்த காங்கிரசு ஆட்சியில் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.

சனவரி 3,2008 அன்று இவரது ஆட்சி நடுவண் அரசால் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டது.[1] இதனை அடுத்து நடந்த தேர்தல்களில் இவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணியின் தலைவர் என்ற முறையில் ஆளுநரால் அரசமைக்க அழைக்கப்பட்டார். மீண்டும் மாநில முதல்வராக மார்ச்சு 12,2008 அன்று பொறுப்பேற்றார்.

Remove ads

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்

2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. ஆளும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றியது.[2]பாரதிய ஜனதா கட்சி கட்சி கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நைபியு ரியோ தலைமையிலான அமைச்சரவை 7 மார்ச் 2023 அன்று பதவியேற்றது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads