பாலக்கரை
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலக்கரை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு மாநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
பாலக்கரை பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 98.53 மீட்டர் உயரத்தில், (10.8108°N 78.6959°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொடருந்து நிலையம்
இவ்வூரிலுள்ள தொடருந்து நிலையம் பாலக்கரை தொடருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
சமயம்
இந்துக் கோயில்
பாலக்கரையில் வெளிகண்ட நாதர் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.[1] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
கிறித்தவக் கோயில்
கிறித்தவக் கோயிலான உலக மீட்பர் பேராலயம் பாலக்கரை பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[3]
தேர்தல் தொகுதிகள்
பாலக்கரை பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads