பி. ஆர். செந்தில்நாதன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

பி. ஆர். செந்தில்நாதன்
Remove ads

பெரி. செந்தில்நாதன் (PR. Senthilnathan) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில், நாகாடி கிராமத்தில் பிறந்தார். தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளநிலை அறிவியல் படித்தார். பெங்களூரு பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். 1988ஆம் ஆண்டில் அஇஅதிமுகவில் சேர்ந்த இவர் 2013ஆம் ஆண்டில் சிவங்கை மாவட்ட அம்மா மன்றச் செயலாளராக பணியாற்றினார். ஏப்ரல் 2013 இல் அஇஅதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][2]

விரைவான உண்மைகள் பெரி. செந்தில்நாதன், பிறப்பு ...

இவர் 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில், அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 229,385 வாக்குகளில் வெற்றி பெற்றார். மேலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசில் கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஜகவில் எச். ராஜா ஆகியோரை தோற்கடித்தார்.[3]

2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads