பீர்க்கன்கரணை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பீர்க்கன்கரணை (ஆங்கிலம்:Peerkankaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டததில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
Remove ads
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
பீர்க்கன்கரணை பகுதி மாவட்டத் தலைமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம், 2.5 கி.மீ. தொலைவில் உள்ள அ பெருங்களத்தூர் ஆகும். இதனருகில் வண்டலூர் 3 கி.மீ.; கிழக்கு தாம்பரம் 3.50 கி.மீ.; பழைய பெருங்களத்தூர் 2.40 கி.மீ. தொலைவில் உள்ளது.
பகுதியின் அமைப்பு
1.786 ச.கி.மீ. பரப்பும், 244 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 25,871 மக்கள்தொகை கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 47.7% ஆகவுயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13% மற்றும் 1% ஆக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு கி.மீ. 4061 நபர் வீதம் வாழ்கின்றனர்.[4][5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads