புகழூர் (காகித ஆலை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிஎன்பிஎல். புகழூர் (ஆங்கிலம்:TNPL Pugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரின் பெயரை இக்காலத்தில் புகழூர் என எழுதி வருகின்றனர். இங்கு தமிழ்நாடு அரசின் காகித ஆலை உள்ளது. இங்குள்ள புன்செய் புகழூரை அடுத்துச் சர்க்கரை ஆலை ஒன்றும் உள்ளது.
Remove ads
அமைவிடம்
டிஎன்பிஎல் புகழூர் நகராட்சி கரூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு புகழூர் தொடருந்து நிலையம் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
8.1 ச.கி.மீ. பரப்பும், 23 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்ட நகராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 1,628 வீடுகளும், 5,556 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
தமிழி எழுத்துக் கல்வெட்டு
- சங்ககாலச் சேர மன்னர்களின் தமிழி எழுத்துக் கல்வெட்டு இவ்வூர் ஆறுநாட்டான் மலைக்குகையில் சமண முனிவர்கள் வாழ்ந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads