பெரியபட்டினம், மைசூர் மாவட்டம்
இந்தியா, கர்நாடகாவில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியபட்டினம் (Periyapatna) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். 12.34°N 76.1°E அமைந்த பெரியபட்டினம் கடல் மட்டத்திலிருந்து 849 மீட்டர் (2769 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பெரியபட்டினம் பெங்களூர்-மைசூர்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை எண் 275-இல் அமைந்துள்ளது. பெரியபட்டினம் நகரம் மைசூர் நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே குசால்நகர் (குடகு மாவட்டம்) அமைந்துள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகளும் 4,031 வீடுகளும் கொண்ட பெரியபட்டினம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 16,685 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 8,284 மற்றும் பெண்கள் 8,401 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1014 வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1851 (11.09 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 85 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.51%, இசுலாமியர்கள் 15.42% , கிறித்தவர்கள் 1.01%, பௌத்தர்கள் 0.95% மற்றும் பிற சமயத்தினர் 0.12% ஆக உள்ளனர்.[1]
Remove ads
படக்காட்சியகம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads