மலேசியா எயர்லைன்சு விமானம் 17

From Wikipedia, the free encyclopedia

மலேசியா எயர்லைன்சு விமானம் 17map
Remove ads

மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17)[2] என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில்[3][4] உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் வீழ்ந்தது.[5] விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[6]

விரைவான உண்மைகள் Incident சுருக்கம், நாள் ...

உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[7][8] உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.[9]

விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக் நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது.[10][11] உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.[12] உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.[13][14]

11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது[15].

Remove ads

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்

Thumb
விமானம் பயணித்த பாதை

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.[16]

விமானத்தின் காலக்கெடு

மேலதிகத் தகவல்கள் கடந்துவிட்ட நேரம், நேரம் ...
Remove ads

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

மேலதிகத் தகவல்கள் நாடு, எண்ணிக்கை ...

விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.[20][21][22] இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர்.[23][24] சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.[17]

ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர்.[25][26][27] இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன்,[28] ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன்,[29] மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய்,[30] மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா[31] ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.

Remove ads

உலக மக்களின் அஞ்சலி

விமானத்தின் விவரங்கள் [32]

  • வகை: போயிங் 777 – 2H6ER
  • வரிசை எண்: 28411
  • பதிவு எண்: 9M-MRD
  • தயாரிப்பு விவரம்: போயிங் 777 வகையில் 84 ஆவது விமானம்.
  • முதல்முறையாக பறந்த நாள்: 17 சூலை 1997
  • மலேசிய ஏர்லைன்சுக்கு விற்கப்பட்ட நாள்: 29 சூலை 1997
  • என்ஜின்கள்: இரண்டு Rolls-Royce Trent 800
  • விமானத்தின் பயணிகள் கொள்ளளவு: 282

குறிப்புகள்

  1. 1 டச்சு-அமெரிக்க இரட்டைக் குடியுரிமை உள்ளவர் உட்பட.
  2. 15 பணியாளர்கள் உட்பட.

மேற்கோள்கள்

இதையும் காண்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads