ரகுராம் கோவிந்தராஜன்

பொருளாதார நிபுணர் From Wikipedia, the free encyclopedia

ரகுராம் கோவிந்தராஜன்
Remove ads

ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக இருந்தார். செப்டம்பர் 5, 2013இல் டி. சுப்பாராவை அடுத்து இப்பதவியில் 23 ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை ஏற்பதற்கு முன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 2008 இல் இவரை இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். 2003 முதல் 2007 வரை அனைத்துலக நாணய நிதியத்தில் முதன்மைப் பொருளியலாளராக இருந்துள்ளார்.

விரைவான உண்மைகள் ரகுராம் கோவிந்தராஜன், 23வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ...

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் பன்னாட்டு செட்டில்மென்டு வங்கியின் துணைத்தலைவராக அமர்த்தப்பட்டார்.[3]

இவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். இவரின் தந்தை தில்லியில் நடுவண் அரசில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் போபாலில் பிறந்து, தில்லியில் வளர்ந்து படித்தார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads