ரஜௌரி கார்டன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ரஜௌரி கார்டன் (Rajouri Garden), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள மேற்கு தில்லி மாவட்டம் மற்றும் ரஜௌரி கார்டன் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு வடமேற்கே 15.9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகர்புறத்தில் பஞ்சாபி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.[2]இப்பகுதியில் நேரு சந்தை உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் சிவாஜி பிளேசில் உள்ளது..[3]இந்நகரம் ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

விரைவான உண்மைகள் ரஜௌரி கார்டன், நாடு ...
Remove ads

போக்குவரத்து

மெட்ரோ நிலையம்

ரஜௌரி கார்டன் மெட்ரோ நிலையம், புது தில்லியுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 104,152 குடும்பங்கள் கொண்ட ரஜௌரி கார்டன் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 481,632 ஆகும். அதில் 259,232 ஆண்கள் மற்றும் 222,400 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 858 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.5% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 55,352 மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 76.83%, இசுலாமியர் 4.1%, சமணர்கள் 0.44%, கிறித்தவர்கள் 1.02%, சீக்கியர்கள் 17.51% மற்றும் பிற சமயத்தினர் 0.11 % வீதம் உள்ளனர். [4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads