ருத்ர தாண்டவம் (திரைப்படம்)
கே. விசயன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருத்ர தாண்டவம் (Rudhra Thaandavam) என்பது 1978 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை கே. விசயன் இயக்க, நாகேஷ் மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்களை வாலியும், கண்ணதாசனும் எழுதியுள்ளனர்.
Remove ads
கதை
ருத்ரா தாண்டவம் படத்தின் கதையானது ஒரு ஏழை பூசாரியின் கனவில் வரும் சிவபெருமான் அவருக்கு உலகத்தை பற்றிய அறிவை வழங்குவதை சித்தரிப்பதே ஆகும்.
நடிகர்கள்
- சிவபெருமானாக வி. கே. ராமசாமி
- பூசாரி பொன்னம்பலமாக நாகேஷ்
- பூசாரியின் மகள் கமலாவாக சுமித்ரா
- ரவியாக விஜயகுமார்
- கனகசமையாக தேங்காய் சீனிவாசன்
- வரதனாக சுருளி ராஜன்
- முத்தம்மாவாக மனோரமா
- மாரப்பனாக எம். ஆர். ஆர். வாசு
- கோபாலாக ராதாரவி
தயாரிப்பு
இப்படமானது சென்னை வாகினி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது.
வரவேற்பு
திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியபடி, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத அளவுக்கு நல்ல வெற்றியை ஈட்டியது. "புதுமையான கதை", நாகேசின் சுவாரஸ்யமான நகைச்சுவை மற்றும் சிவபெருமான் வேடமேற்ற வி. கே. ராமசாமியின் அற்புதமான நடிப்பு போன்றவற்றை அவர் பாராட்டினார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads