லைக்கா தயாரிப்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லைக்கா திரைப்பட தயாரிப்பகம் அல்லது லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.
Remove ads
வரலாறு
2008ஆம் ஆண்டில் வெளியான பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தினை ஞானம் பிலிம்சு என்ற பெயரில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'அய்ங்கரன் இன்டர்நேசனல்' நிறுவனத்துடன் இணைந்து இவரது லைக்கா புரொடக்சன்சு நிறுவனம் விஜய், சமந்தா ருத் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கத்தி திரைப்படத்தினை தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது, 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும், சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.
Remove ads
திரைப்பட விபரம்
தயாரித்த திரைப்படங்கள்
பகிர்ந்தளித்த திரைப்படங்கள்
- நானும் ரவுடி தான் (2015)
- விசாரணை (2016)
- தாரை தப்பட்டை (2016)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads