வாலாசாபேட்டை
பெருநகர வேலூர் மாநகர பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாலாசாபேட்டை அல்லது வாலாஜாபேட்டை (ஆங்கிலம்: Walajapet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். வாலாஜாபேட்டை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
வாலாஜாப்பேட்டையிலிருந்து சென்னை 107 கி.மீ.; வேலூர் 30 கி.மீ.; அரக்கோணம் 50 கி.மீ.; காஞ்சிபுரம் 40 கி.மீ., வேலூர் 90 கி.மீ. மற்றும் ஆரணி 35 கி.மீ. தொலைவில் உள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.9254°N 79.3641°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 184.7 மீட்டர்கள் (606 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,289 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 47,498 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4940 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,027 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.2%, இசுலாமியர்கள் 12.26%, கிறித்தவர்கள் 1.21% , தமிழ்ச் சமணர்கள் 011%, பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[4]
புகழ் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads