கடவுளின் தாய் தேவாலயம், வெட்டுக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடவுளின் தாய் தேவாலயம் (போர்த்துக்கேய மொழி / இலத்தீன் மொழியில் Madre de Deus Church கடவுளின் தாய் தேவாலயம்) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க திருச்சபையானது, இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும்.[1]
Remove ads
வரலாறு
இந்த தேவாலயம் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது.[1] இந்த தேவாலயம் 2010 முதல் 2017 வரை புதுப்பிக்கப்பட்டு,[2] எட்டு வருட சீரமைப்புக்குப் பிறகு 2018 சனவரி 31 அன்று லத்தீன் கத்தோலிக்க பேராயர் சூசா பாக்கியம் மீண்டும் திறந்து வைத்தார்.[3]
திருவிழா
இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.[4] பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த தேவாலயத்திற்கு வருகிறார்கள்.[5]

அமைவிடம்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கொச்சுவேலி இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads