சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென்னை கோட்டை தொடருந்து நிலையம் (Chennai Fort Railway Station, நிலையக் குறியீடு:MSF) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் சென்னைக் கடற்கரை முதல் வேளச்சேரி வரை செல்லும் தடமும்,[2] சென்னைக் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. இது கடற்கரையை ஒட்டிய இரண்டாவது நிறுத்தம் ஆகும்.
Remove ads
வரலாறு
சென்னை ஜார்ஜ் கோட்டையின் நினைவாக, இந்த நிலையத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையம் 260 சதுர மீட்டர் திறந்த நிறுத்தும் வசதிகளை கொண்டுள்ளது.[3]
அருகிலுள்ள இடங்கள்
இந்த நிலையத்திலிருந்து மதராசு மருத்துவக் கல்லூரி சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகிலேயே பிராட்வே பேருந்து நிலையம், பாரிமுனை, சென்னை பல் மருத்துவ கல்லூரி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவை அமைந்துள்ளது.
படங்கள்
- கோட்டை ரயில் நிலையத்தின் வான்வழிப் பார்வை, ஈ.வெ.ரா சாலையின் வழியாக
- சென்னை கடற்கரையில் இருந்து வரும் வழித்தடம்
- சென்னைக் கோட்டை
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads