சேலம் மாநகராட்சி
இது தமிழக மாநகராட்சிகளுள் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேலம் மாநகராட்சி (Salem City Municipal Corporation) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும். இது, தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்பின்படி, ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய நகரங்களுக்கு அடுத்த ஐந்தாவது பெரிய மாநகராட்சி ஆகும். இம்மாநகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சியாக செயல்படுகின்றது. சேலம் நகராட்சி 1966ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களையும் அறுபது (60) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 312 கோடி ரூபாய் ஆகும்.
தமிழ் நாடு
பெருநகர சேலம் மாநகராட்சி இக்கட்டுரை |
மாநகராட்சி மன்றம்
|
ஏனைய மாவட்டங்கள் · அரசியல் நுழைவு சேலம் பெருநகர பகுதி தமிழக உள்ளாட்சி நுழைவு |
Remove ads
சேலம் மாநகராட்சி எல்லைகள்
01.04.1979 முதல் சூரமங்கலம் நகராட்சி, ஜாரிகொண்டாலம்பட்டி, கன்னங்குறிச்சி பேரூராட்சிகளும் மற்றும் 21 கிராம ஊராட்சிகளும் இணைத்து. இதன் பரப்புளவு 93.34 ச.கி.மீ. கொண்டதாக விரிவுப்படுத்தப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1,032,336 ஆகும்.
மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் சேலம் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் தேர்தலில் திமுகவின் ஆ. இராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.[2]
தற்போதைய மாநகராட்சி
நகரத் தந்தைகள் பட்டியல்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads