சைதாப்பேட்டை தொடருந்து நிலையம்
தமிழ்ட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைதாப்பேட்டை தொடருந்து நிலையம் (Saidapet railway station, நிலையக் குறியீடு:SP) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இது சைதாப்பேட்டை மற்றும் சின்னமலை பகுதிகளின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது, மேலும் கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் (33 அடி) உயரத்தில் உள்ளது.
Remove ads
வரலாறு
சைதாப்பேட்டை தொடருந்து நிலையமானது, மே 11, 1931 ஆம் ஆண்டு சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையிலான புறநகர் இரயில் சேவை தொடங்கிய போது கட்டப்பட்டது. இது 15 நவம்பர் 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads