தாமான் ஜொகூர் ஜெயா
ஜொகூர் பாருவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமான் ஜொகூர் ஜெயா (ஆங்கிலம்: Taman Johor Jaya; மலாய்: Taman Johor Jaya; சீனம்: 柔佛再也; ஜாவி: جوهر جاي) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், ஜொகூர் பாருவில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி ஆகும்.[2]
தாமான் ஜொகூர் ஜெயா பெரும்பாலும் குடியிருப்பு வீடுமனைப் பகுதிகளைக் கொண்டது. அத்துடன் இந்தப் புறநகர்ப்பகுதி இலகுவான தொழில்துறை மற்றும் வணிக வளாகங்களையும் கொண்டுள்ளது. இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பாலோர் சிங்கப்பூரில் தொழில் செய்பவர்களாக உள்ளனர்.
Remove ads
வரலாறு
1983-ஆம் ஆண்டில் டெய்மன் மேம்பாட்டு நிறுவனம் (Daiman Development Berhad); ஜொகூர் ஜெயாவை உருவாக்கியது. முதல் கட்டமாக ஜொகூர் ஜெயாவில் ஒற்றை மாடி வீடுகள் கட்டப் பட்டன.[3]
1987-ஆம் ஆண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு அடைந்தன. ஆனால் கட்டப்பட்ட வீடுகள் அனாமதேயப் பேர்வழிகளால் உடைக்கப்பட்டு சேதம் அடைகின்றன எனும் செய்திகள் காரணமாக ஆரம்பத்தில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தயங்கினர்.[4]
வீடமைப்புத் திட்டங்கள்
இருப்பினும் 1989 ஜனவரி மாதம் ஆங்கேரிக் (Anggerik); டெடாப் (Dedap); தெராத்தாய் (Teratai) எனும் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என டெய்மன் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்தது. அந்தத் திட்டங்களில் ஒற்றை மாடி வீடுகள்; இரட்டை அடுக்கு மாடி வீடுகள்; கடைவீடுகள் மற்றும் விளையாட்டு வளாகம் போன்றவை கட்டப் படுவதற்கு திட்டமிடப் பட்டது.[5]
1992-இல் நிறைவு அடைந்த இந்த மூன்று வீடமைப்புத் திட்டங்களின் மூலமாக 11,132 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. 1992 - 1993-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கீம்போங் (Keembong) மற்றும் சரோஜா (Seroja) வீடமைப்புத் திட்டங்கள் நிறைவு அடைந்தன.[6]
Remove ads
மக்கள்தொகை
2010-ஆம் ஆண்டு வீட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜொகூர் ஜெயாவில் மொத்தம் 16,000 குடும்பங்கள் உள்ளன. அங்கு வாழும் மக்களில் 49% சீனர்கள்; 44% மலாய்க்காரர்கள்; மற்றும் 7% இந்தியர்கள்.[7]
கணிசமான எண்ணிக்கையில், தொழிலாளர்களாக வேலை செய்யும் இந்தோனேசியர்கள்; நைசீரியர்கள்; வியட்நாமியர்கள் போன்ற வெளிநாட்டினரும் உள்ளனர்.
மேற்கோள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
