திரிசூலம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

திரிசூலம் தொடருந்து நிலையம்map
Remove ads

திரிசூலம் தொடருந்து நிலையம் (Tirusulam railway station, நிலையக் குறியீடு:TLM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் திரிசூலம், பொது தகவல்கள் ...

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 32 இல் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் எதிர் திசையிலேயே சென்னை வானூர்தி நிலையம் உள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 20மீ உயரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

வளர்ச்சி

இந்த நிலையம் சுரங்கப்பாதை மூலம் சென்னை விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இந்த நிலையம் விமான நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்தாலும், சரியான அணுகுமுறையும், மேற்கூரையும் மற்றும் பிற வசதிகள் இல்லாததால் இந்த நிலையம் விமான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.[3] 2012 இல் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கியதன் மூலம், நிலையத்தில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.[4] விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்துடன், இந்நிலையத்தை இணைக்கும் திட்டங்களும் உள்ளன.[5]

Remove ads

படங்கள்

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads