திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் (ஆங்கிலம்: Thirumalaivaiyavoor Prasanna Venkatesa Perumal Temple) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் திருமலைவையாவூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[3][4]

விரைவான உண்மைகள் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12.5964°N 79.8923°E / 12.5964; 79.8923 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வெங்கடேசர்; தாயார் அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர்களாக சீனிவாசர் மற்றும் கள்ளபிரான் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரசன்ன வெங்கடேச பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், இலட்சுமிவராகர், இராமர், ஜெய வீர ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், சுதர்சன ஆழ்வார், நரசிம்மர், ஆண்டாள் மற்றும் இராமானுசர் ஆகியோர் சன்னதிகள் இக்கோயிலில் அமையப் பெற்றுள்ளன. இக்கோயிலின் தீர்த்தம் வராக தீர்த்தம் ஆகும். வைகானச ஆகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.[5]

இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads