நங்கநல்லூர் இலட்சுமி அயவதனப் பெருமாள் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நங்கநல்லூர் இலட்சுமி அயவதனப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், நங்கநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
Remove ads
கோயில் அமைப்பு
இக்கோயிலில் ஸ்ரீ லஷ்மி ஹயவதனப் பெருமாள், மஹாலஷ்மி சன்னதிகளும், கருடன், தேசிகன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads