நாராயணவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயணவனம் என்னும் ஊர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாராயணவனம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1] இது திருப்பதி - ஊத்துக்கோட்டை - சென்னை வழியில் உள்ள ஊர். இது திருப்பதியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் உள்ளது. புத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு சுரைக்காய் சுவாமி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது. நாராயணவனத்திலிருந்து கைலாசநாதர் நீர்வீழ்ச்சி 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இராகு பரிகாரத்தலமான இராமகிரி கோயில் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோயில் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ சென்றால் சுருட்டுப்பள்ளி என்னும் ஊரில் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாராயணவனத்தின் மக்கள்தொகை 10,965 ஆக இருந்தது. இதில் 50% ஆண்களாகவும் 50% பெண்களாகவும் உள்ளனர். இவ்வூர் தேசிய சராசரியான 59.5% இனை விட அதிகமான 72% சராசரி எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது: ஆண்களின் எழுத்தறிவு 80%, பெண்களின் எழுத்தறிவு 63% ஆகும். இங்குள்ள மக்கள் தொகையில் 13% ஆனேர் 6 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.
ஊர்கள்
நாராயணவனம் மண்டலத்தில் பதினாறு ஊர்கள் உள்ளன.[2]
- கொண்டலசெருவு
- கல்யாணபுரம்
- எரிக்கம்பட்டு
- திருவத்தியம்
- நாராயணவனம்
- வெங்கடகிருஷ்ணபாலம்
- கீழகரம்
- சமுதாயம்
- பீமுனிச்செருவு
- இப்பந்தாங்கல்
- திகுவகணகம்பாலம்
- காசிமிட்டா
- பொப்பராஜுபாலம்
- ஆரண்யம் கண்டுரிகா
- தும்பூர்
- பாலமங்களம்
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 24. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[3]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
