பம்பாய் சகோதரிகள்
கருநாடக இசைப் பாடகர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பம்பாய் சகோதரிகள் (Bombay Sisters, சி. சரோஜா (பிறப்பு: 7 திசம்பர் 1936), சி. லலிதா (26 ஆகத்து 1938 – 31 சனவரி 2023) ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடினர்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
பம்பாய் சகோதரிகளான சி. சரோஜா, சி. லலிதா ஆகியோர் கேரளத்தின் திருச்சூரில் முக்தாம்பாள் - என் சிதம்பர ஐயர் ஆகியோருக்கு மகள்களாக பிறந்தனர். சகோதரிகள் இருவரும் அப்போதைய பம்பாயின் மட்டுங்காவில் பள்ளிக் கல்வி பயின்று, தில்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். இவர்கள் எச். ஏ. எஸ். மணி, முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்.
தொழில் வாழ்க்கை
1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியதால் இருவரும் பம்பாய் சகோதரிகள் என்ற பெயர் பெற்றனர். இவர்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளனர்.
குடும்பம்
வழக்கறிஞரான என். ஆர். சந்திரனை லலிதா மணந்தார். என் ஆர். சந்திரன் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராவார். லலிதா சந்திரன் 2023 சனவரி 31 அன்று தன் 84வது அகவையில் இறந்தார்.[1]
விருதுகள்
- சங்கீத சூடாமணி விருது, 1991. வழங்கியது ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது,2006. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- ஆஸ்தான விதுசி; வழங்கியது: காஞ்சி சங்கர மடம்
- சங்கீத கலாநிதி விருது,2010. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நினைவு விருது, 2013. வழங்கியது: மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை[3]
- சங்கீத கலாசிகாமணி விருது 2006 ; வழங்கியது இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- இந்திய அரசின் பத்மசிறீ விருது 2020[4][5]
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads