பூவிருந்தவல்லி
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), அல்லது பூந்தமல்லி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு தேர்வு நிலை நகராட்சியாகும். இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'புஷ்பகிரிமங்கலம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்கு உண்டு. பூந்தமல்லி நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியானது திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13.05°N 80.11°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியது. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads