மஞ்செரியல் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்செரியல் மாவட்டம் (Mancherial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3]ஆதிலாபாத் மாவட்டத்தின் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மஞ்செரியல் நகரம் ஆகும்.


Remove ads
மக்கள் தொகை
4056.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[4] இம்மாவட்ட மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,07,037 ஆகும்.[4]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் மஞ்செரியல் மற்றும் பெல்லம்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 18 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[5][6] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் ஆர். வி. கர்ணன் ஆவார்.[7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads