மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் விளக்குத்தூண் பகுதிக்கு அருகில் பந்தடி ஐந்தாவது தெருவில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால், தெற்கு கிருஷ்ணன் கோயில் என்ற இன்னொரு பெயரும் உண்டு.[3]

விரைவான உண்மைகள் மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 184 மீட்டர் உயரத்தில், 9.913249°N 78.122825°E / 9.913249; 78.122825 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மூலவர் நவநீத கிருஷ்ணர்; தாயார் மகாலட்சுமி ஆவர். இக்கோயிலில் சீனிவாச பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், மகா கணபதி, கருடாழ்வார், இராமர், சீதை, இலட்சுமணன், ஆஞ்சநேயர், இராகு, கேது, நாகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படும் சில முக்கியமான திருவிழாக்களாகும்.[4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads