மானிப்பாய் இந்துக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மானிப்பாய் இந்துக் கல்லூரி (Manipay Hindu College) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு உயர் பாடசாலை ஆகும்.

விரைவான உண்மைகள் Manipay Hindu College மானிப்பாய் இந்துக் கல்லூரி, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

1909 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயைச் சேர்ந்த செல்வந்தர் வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.[1]

பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 சூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்புச் செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும், வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டன. 1965 இல் முத்துவேற்பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டன. அடுத்து 1970ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டிடமும் அமைக்கப்பட்டன. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாகக் கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983ல் 3 மாடி கட்டிடமான சாரி மண்டபமும் அமைக்கப்பட்டன.

Remove ads

மகுட வாசகம், நோக்கக் கூற்று மற்றும் செயற்கூற்று

மகுட வாசகம்

கடவுளுக்காகவும், நாட்டுக்காகவும்

நோக்கக் கூற்று

சமூகப் பொருத்தப்பாடும் பல்துறை ஆற்றல்களும் கொண்ட நற்பிரஜைகளை உருவாக்குதல்

செயற்கூற்று

மாணவர்களின் உடல், உள, சமூக, ஆன்மீக செயற்பாடுகளில் அர்ப்பணிப்புமிக்க உத்தம நிலையை எய்துவதற்கு, வளங்களையும் வாய்ப்புக்களையும் சிறப்பாக ஒழுங்கமைத்தல்

அதிபர்கள்

1910 – 1911 திரு S.வீரசுவாமிப்பிள்ளை
1911 – 1913 திரு P.சபாபதிப்பிள்ளை
1913 – 1914 திரு G.A.ஷிவா ராவ்
1914 – 1915 திரு ஆ.சபாரட்ணசிங்கம்
1915 – 1917 திரு T.P.ஹட்சன் பரமசாமி
1917 – 1920 திரு J.H.குரோஸ்டே
1920 – 1921 திரு S.சிவபாதசுந்தரம்
1921 – 1922 திரு.சின்னத்தம்பி மயில்வாகனம்

(சுவாமி விபுலானந்தர்)

1922 – 1952 திரு வி.வீரசிங்கம்
1952 – 1955 திரு S.நவரட்ணம்
1956 – 1972 திரு R.முத்துவேற்பிள்ளை
1972 – 1979 திரு M.பேராயிரவர்
1979 – 1983 திரு S.T.சாறி
1983 திரு P.சுந்தரலிங்கம் (பதிலதிபர்)
1983 – 1989 திரு S.V.மகேசவேலு
1989 – 1998 திரு C.கேசவராயர்
1998 – 2004 திரு மு.சண்முகநாதன்
2004 – 2005 திரு ஆ.ஜெகநாதன் (பதிலதிபர்)
2005 – 2015 திரு Capt.S.சிவநேஸ்வரன்
2015 – 2018 திரு M.இந்திரபாலா  (பதிலதிபர்)
2018 – 2020 திரு S.இந்திரகுமார் (பதிலதிபர்)
2020 - இன்றுவரை திரு.S.இளங்கோ

இல்லங்கள்

மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவர்கள் சுந்தரர், சம்பந்தர், மானிக்கர், வாகீசர் என நான்கு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். வருடந்தோரும் முதலாம் தவணையின் நடுப்பகுதியில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றன.

1924ம் ஆண்டு அமரர் திரு.V.வீரசிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு முதன் முதலாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

சைவ சமயத்தில் நால்வர் அல்லது நால்வர் பெருமக்கள் அல்லது சமயகுரவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (வாகீசர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்), மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்கள் இல்லங்களிற்கு சூட்டப்பட்டன.

மேலதிகத் தகவல்கள் இல்லம், நிறம் ...
Remove ads

ஆசிரியர்கள்

இங்கு கல்வி கற்றவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads