வெண்ணந்தூர்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இங்கு வெண்ணந்தூர் ஏரி உள்ளது.வெண்ணந்தூர் பேரூராட்சி பிரதான தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

வெண்ணந்தூரில் இருந்து அதன் மாவட்ட தலைநகர் நாமக்கல் 38 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ.. தொலைவில் உள்ள இராசிபுரம் தொடருந்து நிலையம் ஆகும்.

இதன் கிழக்கே அத்தனூர் 5 கி.மீ..; மேற்கே ஆட்டையாம்பட்டி 5 கி.மீ..; வடக்கே மல்லூர் 7 கி.மீ.. மற்றும் தெற்கே சௌதாபுரம் ஊராட்சி 5 கி.மீ.. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.81 ச.கி.மீ... பரப்பும், பேரூராட்சி மன்ற 15 உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] வெண்ணந்தூர் பேரூராட்சி K.P.AR.ராமசாமி முதலியார் மருத்துவமனை உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,844 வீடுகளும், 14,568 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads