From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் மலைப்பாதைத் தொடருந்துகள் என்பவை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்ட ஐந்து தொடருந்துப் பாதைகளைக் குறிக்கும். இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை இவை இயக்கப்படுகின்றன. 2005 முதல் இந்திய இரயில்வே இயக்கும் காஷ்மீர் ரயில்வேயும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மலைத் தொடருந்துகளில் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே [1881], கால்கா-ஷிம்லா இரயில்வே [1898], காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே [1924],மற்றும் காஷ்மீர் ரயில்வே [2005] ஆகிய நான்கும் வட இந்தியாவில் கரடுமுரடான இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மற்ற இரண்டும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மலை இரயில் பாதை மற்றும் மகாராஷ்டிராவின் மாதெரன் மலை இரயில்பாதை ஆகியவையாகும். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, நீலகிரி மலை ரயில் மற்றும் கால்கா-ஷிம்லா இரயில்வே எனக்கூட்டாக "இந்தியாவின் மலைத் தொடருந்துகள்" என்ற பெயரில்யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2][3] இவை உலக அளவில் அறிவிக்கப்பட்ட அகல மற்றும் குறுகிய இருபது தொடருந்துப் பாதைகளில் ஐந்தாகும்.[4]
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்திய மலைப்பாதை தொடருந்துகள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 944 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1999 (23rd தொடர்) |
விரிவாக்கம் | 1999 டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே; 2005 கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை; 2008 நீலகிரி மலை இரயில் பாதை |
இந்த மலைப்பாதை தொடருந்துகள் இன்றும் நல்ல நிலையில் இயங்குவதுடன் அடிவாரத்தில் உள்ள முக்கிய இடங்களைத் தொடர்புப்படுத்துகின்றன. சிறந்த பொறியியல் தொழினுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கின்றன.[1][2][3]
1844 ல் பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரான சர் ஜான் லாரன்ஸ் என்பவரால் இந்தியாவில் மலைப்பாதைத் தொடருந்துத் தடங்களை அமைக்கும் பணி தொடங்கியது.[5] குறிப்பாக இமயமலை மற்றும் இந்தியாவின் மற்ற மலைத்தொடர்களில் பிரித்தானியர்களின் காலனியாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் படைத் தளத்தை அமைக்க வேண்டியும் இந்தியாவின் முக்கியமான மலைப்பகுதிகளில் தொடருந்துப் பாதைகள் அமைக்கப்பட்டன. இதற்காக டார்ஜிலிங், சிம்லா, காங்ரா பள்ளத்தாக்கு, உதகமண்டலம், மாதெரன் மலை ஆகிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[2][6][7]
Name | நீளம் கி. மீட்டரில் | கட்டப்பட்ட ஆண்டு | வகை | பாதை அளவு |
---|---|---|---|---|
டார்ஜிலிங்- இமாலயன் தொடருந்து மலைப்பாதை | 84 கி. மீ | 1881 | குறுகிய பாதை | 610 மிமீ (2 அடி) |
நீலகிரி மலைத் தொடருந்து | 46 கி. மீ | 1908 | மீட்டர் பாதை | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
கல்கா- சிம்லா தொடருந்து மலைப்பாதை | 96 கி. மீ | 1903 | Bosnian gauge | 762 மிமீ (2 அடி 6 அங்) |
மாதெரன் மலைத் தொடருந்து | 20. கி. மீ | 1907 | குறுகிய பாதை | 610 மிமீ (2 அடி) |
காங்ரா பள்ளத்தாக்குத் தொடருந்து | 164. கி. மீ | 1929 | Bosnian gauge | 762 மிமீ (2 அடி 6 அங்) |
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த தொடருந்து இயக்கப்படுகிறது.[6] இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் 'டாய் டிரெய்ன்' என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் 86 கி. மீ பயணத்தில் டார்ஜிலிங்கை அடைகிறது. குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவிப் பொறி இழுத்துச் செல்கிறது[8][9]. இந்த ரயில்பாதை 1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு, தொடருந்துப் போக்குவரத்து தொடங்கியது.[8][10] இது முதலில் சரக்குப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.[8][10][11]
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் தொடருந்து மலைப் பாதை 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது தொடருந்துப் பாதை ஆகும்.[1] முதல்தொடருந்துப் பாதை ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில் ஆகும்.
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைத் தொடருந்து இயக்கப்படுகிறது. 1845 ஆம் ஆண்டில் தொடருந்து மலைப்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899 ஆம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர்.[12] பல்சக்கரங்களைப் பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.[12]
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவிப்பொறியும் பின்னர் டீசல் இயந்திரப் பொறியும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46 கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்து மணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள் உள்ளன.[2][13][14] எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கை மனதைத் தாலாட்டும் நீலகிரி மலைரயில் 2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இமயமலை அடிவாரத்தில் உள்ள சிம்லா மற்றும் கல்கா ஆகிய இரு நகரங்களுக்கிடையே இம்மலைப்பாதை தொடருந்து அமைக்கப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லா.[2][15] கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயர் சிம்லாவில் நிலவும் குளிர் தட்ப வெப்பநிலை காரணமாக பிரித்தானிய இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர்.[2][15][16] படைத் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு தொடருந்தில் செல்வது சுகமான அனுபவமாகும். கல்கா - சிம்லா மலைப்பாதைத் தொடருந்து 2008 ஆம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.[1]
மத்தியரன் மலை ரயில்வே என்பது இந்தியாவின் மகாராஷ்டிராவில் 2 அடி (610 மி.மீ) குறுகிய பாதை பாரம்பரிய ரயில் ஆகும். இது மத்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படுகிறது. இது 21 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது. மத்தியரன் மலைத் தொடருந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.