நாம் தமிழர் கட்சி
தமிழ் இன தேசியவாத கொள்கை கொண்ட இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
சி. பா. ஆதித்தனார் தலைமையில் செயல்பட்ட நாம் தமிழர் கட்டுரையைப் பார்க்க.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய,[4][5] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும்.[6] [7].[8] இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.[9]
விரைவான உண்மைகள் நாம் தமிழர் கட்சி, சுருக்கக்குறி ...
நாம் தமிழர் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | நாதக |
தலைவர் | சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர்) [1] |
தொடக்கம் | 18 மே 2010 |
முன்னர் | நாம் தமிழர் இயக்கம் |
தலைமையகம் | கதவு எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், போரூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா 600 116.[2] |
மாணவர் அமைப்பு | அப்துல் ரகூப் மாணவர் பாசறை |
இளைஞர் அமைப்பு | முத்துக்குமார் இளைஞர் பாசறை |
பெண்கள் அமைப்பு | செங்கொடி மகளிர் பாசறை |
கொள்கை | தமிழ்த் தேசியம் சூழலியம் |
நிறங்கள் | சிகப்பும் மஞ்சளும் |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்த கட்சிகள்[3] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மாநிலச் சட்டப் பேரவை) | இந்திய மாநிலங்கள் |
தேர்தல் சின்னம் | |
மைக் (ஒலிவாங்கி) | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
naamtamilar.org | |
இந்தியா அரசியல் |
மூடு
இக்கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காணப்படுகிறது. 2009 மே 18 ஆம் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதையடுத்து அதை தொடர்ந்த ஓராண்டில் "நாம் தமிழர் கட்சி" தமிழ்த் தேசிய கொள்கைகளை பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.