கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
From Wikipedia, the free encyclopedia
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (Eastern University, Sri Lanka) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.[3] 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி இதன் ஒரு பாகமாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.
விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், குறிக்கோளுரை ...
முந்தைய பெயர்கள் | மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி (1981–1986) |
---|---|
குறிக்கோளுரை | Per Ardua Ad Scientiam (இலத்தீன்) |
வகை | பொது |
உருவாக்கம் | ஆகஸ்ட் 1, 1981 (பல்கலைக்கழகக் கல்லூரி) அக்டோபர் 1, 1986 (பல்கலைக்கழகம்)[1] |
வேந்தர் | மரு. வேல்முருகு விவேகானந்தராஜா |
துணை வேந்தர் | பேராசிரியர் எப். சி. ராகல் |
கல்வி பணியாளர் | கலை கலாச்சார, விஞ்ஞான, வர்த்தக முகாமைத்துவ, விவசாய மற்றும் சௌக்கிய பராமரிப்பு பீடம் |
மாணவர்கள் | 1110 மாணவர்கள் ஒரு வருடத்திற்கு சேர்க்கின்றனர்.(2013) [2] |
அமைவிடம் | , 7°47′51.40″N 81°34′55.20″E |
வளாகம் | இலங்கைப் பல்கலைக்கழகம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | http://www.esn.ac.lk |
மூடு
இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.