தெற்காசிய சமூகக் குழுவினர் From Wikipedia, the free encyclopedia
ராஜ்புத் அல்லது ராஜபுத்திரர்கள் என்ற சொல்லுக்கு அரசனின் மகன் என்று பொருள்.[1] இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல். ராஜபுத்திரர்கள் எனவும் இவர்களை அழைப்பர். இவர்கள் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியா பகுதிகளில் வசித்து வந்தனர். இந்து மதத்தின் வீரம் மிக்கவர்கள் என இவர்களைச் சொல்லலாம்.[2] தற்போதைய ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் இவர்கள் அரசாட்சி செலுத்தி வந்தனர். 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் மிகவும் செல்வாக்கோடு இருந்த காலம்.[3]
ராஜபுத்திரகளின் தோற்றம் பற்றி 6 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றில் எந்தவித பதிவுகளும் இல்லை என வரலாற்றாசிரியர்கள் வி.பி.மாலிக் மற்றும் எம். எஸ் . நாரவானே ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.[4] ஹூணர்களால் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்து மதத்தின் வருணாசிரமம் போன்றவற்றினால் ஹூணர்கள் இந்திய சமூகத்தோடு கலந்து 36 வகையான ராஜபுத்திரர்கள்[5] இனம் உருவாகியிருக்கக் கூடும் எனச் சொல்கின்றனர்.[6] ஆனால் கவுரி சங்கர் மற்றும் சி.வி.வைத்யா போன்ற வரலாற்று அறிஞர்கள் இதை ஏற்கவில்லை.[7]
9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து, ராஜ்புத் வம்சாவளியினரின் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தினர். மேலும் பல சிறிய ராஜபுத்திர குல அரசாட்சிகள் சில பகுதிகளில் இருந்தது. வட இந்தியாவில் முகலாய அரசர்களின் வெற்றி இவர்களின் அரசு வீழ்வதற்குக் காரணமாய் அமைந்தது. மேலும் பஞ்சாப் மற்றும் கங்கை நதி பள்ளத்தாக்கை முஸ்லீம் கைப்பற்றிய பிறகு, ராஜபுத்திரர்கள் தங்கள் அரசை இழந்து காடுகளில் பதுங்கி வாழ வேண்டியதாயிற்று. பின்னர், அலாவுதீன் கில்சி போன்ற தில்லி சுல்தான்களால் தென்கிழக்கு இராஜஸ்தானின் மேவார் பகுதியின், சித்தோர்கார் கோட்டை, ஜெய்சல்மேர் கோட்டை மற்றும் பல கோட்டைகளைக் கைப்பற்றப்பட்டதால் ராஜபுத்திர அரசுகள் வீழ்ச்சியுற்றது.[1]
இராஜபுத்திர மன்னர்கள் புந்தேல்கண்ட், மகோபா மற்றும் கலிஞ்சர் பகுதிகளை ஆண்ட சந்தல வம்ச இராஜபுத்திர மன்னர்கள் கி பி 10 - 11-வது நூற்றாண்டில் கஜுராஹோ கோயில்களைக் கட்டினர். கலிஞ்சர் கோட்டை, ஜோத்பூர் கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை, உதய்ப்பூர் கோட்டை போன்று மலைகளின் மீது பெரும் கோட்டைகளை கட்டி ஆண்டனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ராஜபுத்திர சமஸ்தானத்திற்கு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர்கள் பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது இந்தியாவுடன் இணையலாம் அல்லது தனி நாடாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் இந்தியாவோடு இணைந்திருக்கிறோம் என உடன்படிக்கை செய்தனர்.[8]
இவர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தனர். மது அருந்தும் பழக்கமும் வெற்றிலை போடும் பழக்கமும் இருந்திருக்கிறது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.