அயோத்தியாபட்டினம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அயோத்தியாபட்டினம் (ஆங்கிலம்:Ayothiapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அயோத்தியாப்பட்டின ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு செயல்படுகிறது. இங்கு அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் கோயில் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

அயோத்தியாபட்டினம் பேரூராட்சி, சேலத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும்; வாழப்பாடியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,982 வீடுகளும், 11,517 மக்கள்தொகையும், எழுத்தறிவு 79%, பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,473 மற்றும் 80 ஆக உள்ளனர்.[4][5]

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads