இராமநாதபுரம் சமஸ்தானம்
கடைசி தமிழ் பேரரசு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு (Ramnad Estate) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும்.



சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளாக இருந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் சேதுகாவலர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். [1][2][3]
Remove ads
வரலாறு
மதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.
மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4]
Remove ads
பரப்பு & மக்கள் தொகை
இராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . சென்னை மாகாணத்தின் பெரும் சீமையாகும். .
வருவாய் வட்டங்கள்
இராமநாதபுரம் சீமை, இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, பள்ளிமடம் மற்றும் முதுகுளத்தூர் என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராமேசுவரம் ஆகும்.
சேதுபதிகள் பட்டியல்
- உடையான் சேதுபதி (1590–1621)[5]
- கூத்தன் சேதுபதி (1622–1635)
- தளவாய் சேதுபதி (1635–1646)
- திருமலை ரெகுநாத சேதுபதி (1647–1672)
- இராஜ சூரிய சேதுபதி (1672)
- ஆதன இரகுநாத சேதுபதி (1673)
- தனி ஆட்சியாளர்களாக
- இரகுநாத கிழவன் சேதுபதி (1674–1710)
- முதலாம் விஜயரகுநாத சேதுபதி (1711–1725)
- சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி (1725–1726)
- பவானி சங்கர சேதுபதி (1726–1729)
- குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி (1730–1735)
- சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி (1736–1748)
- இராக்கத் தேவர் சேதுபதி (1748–1749)
- செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (1749–1761)
- முதலாம் முத்துராமலிங்க சேதுபதி (1761–1795)
சுதேச சமஸ்தான மன்னர்கள்:
- இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியார் (1795–1807)
- ஜமீன்தார்களாக
- அண்ணாசாமி சேதுபதி (1807–1820)
- இராமசுவாமி சேதுபதி (1820–1829)
- இராணி முத்து வீராயி நாச்சியார் (1829–1830)
- சேதுபதி மங்களேஸ்வரி நாச்சியார் (1830–1845)
- பர்வத வர்தனி நாச்சியார் (1846–1862)
- இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி (1862–1873)
- பாஸ்கர சேதுபதி (1889–1903)
- பிரித்தானிய இந்திய ஆட்சியில் 1903–1910
- பிறர்
- இராஜ ராஜேஸ்வர சேதுபதி (1910–1928)
- சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1928–1967)
- இராமநாத சேதுபதி (1967–1979)
- இராணி இந்திரதேவி நாச்சியார் (1979–1998
- இராஜேஸ்வரி நாச்சியார் (1998- தற்போது வரை)
Remove ads
இவற்றையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads