இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி

From Wikipedia, the free encyclopedia

இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி
Remove ads

இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி என்பவர் (பெப்ரவரி 14, 1914 - மார்ச் 21, 1998) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார்.[1] இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர்த்திகள்’ என இசை விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்.[1] இவர், மதுரை மாரியப்ப சுவாமிகளின் இசை நிகழ்ச்சிகளில் மிருதங்கம் வாசித்துள்ளார்.

விரைவான உண்மைகள் இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் பிறந்த இவர், தனது தந்தை சித்சபை சேர்வையிடம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை ஆரம்பித்தார். தொடர்ந்து பழனி முத்தையா பிள்ளையிடம் இசையினைக் கற்றார். முருகபூபதியின் மூத்த தமையன் சி. எஸ். சங்கரசிவம் பாகவதர் என்பவர், முருகபூபதி தனக்கென ஒரு பாணியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் துணை புரிந்தார். இடது கையினால் மிருதங்கத்தில் செய்யப்படும் வாசிப்பு நுணுக்கங்களை, அக்காலத்து தலைசிறந்த மிருதங்கக் கலைஞர்களில் ஒருவரான கும்பகோணம் அழகநம்பி பிள்ளையிடமிருந்து முருகபூபதி கற்றார்.

Remove ads

தொழில் வாழ்க்கை

இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்:

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:[1]

  • மாவேலிக்கரா சங்கரகுட்டி நாயர்
  • காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி
  • கும்பகோணம் பிரேம்குமார்
  • பி. துருவராஜ்
  • ஜி. ஹரிசங்கர்
Remove ads

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads