ஓமந்தை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓமந்தை தொடருந்து நிலையம் (Omanthai railway station, ஓமந்தை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இந்நிலையம் புனரமைக்கப்பட்டு 2011 மே 27 முதல் மீண்டும் சேவையாற்றுகின்றது.[1] அன்றில் இருந்து யாழ்தேவி சேவை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை சேவையாற்றி வந்தது. 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை ஓமந்தையூடாக யாழ்தேவி பயணம் மேற்கொண்டது.[2] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கி.மீ. நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[3]
|
Remove ads
சேவைகள்
2013 செப்டம்பர் 14 முதல் நாள்தோறும் கொழும்பில் இருந்து ஓமந்தையூடாக கிளிநொச்சி வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி), மற்றும் இரவுத் தபால் வண்டி ஆகிய பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads