கடலோரக் கவிதைகள்
பாரதிராஜா இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடலோரக் கவிதைகள் (Kadalora Kavithaigal) என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கிய இத்திரைப்படத்தில், சத்யராஜ், ரேகா, இராஜா, ஜனகராஜ், கமலா காமேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] மேலும் இத்திரைப்படம், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் ஆராதனா என தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டது. கன்னடத்தில், பி. சி. பாட்டீல், பிரேமா ஆகியோரது நடிப்பில் கௌரவா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இது, ரேகா, ராஜா, ரஞ்சனி ஆகிய மூவரும் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
சத்யராஜின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது 200 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அடி ஆத்தாடி (சோகம்) | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | வைரமுத்து | 03:42 |
2 | அடி ஆத்தாடி | இளையராஜா, எஸ். ஜானகி | 04:39 | |
3 | தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் | இளையராஜா | கங்கை அமரன் | 03:00 |
4 | கொடியிலே மல்லியப்பூ | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:21 |
5 | பொடிநடையா போறவரே | சித்ரா | கங்கை அமரன் | 05:23 |
6 | போகுதே போகுதே | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:34 |
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads