குவகாத்தி பல்கலைக்கழகம்
வட கிழக்கு இந்தியாவில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குவகாத்தி பல்கலைக்கழகம் (Gauhati University) வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. [2]
Remove ads
வளாகம்
இது குவஹாத்தி நகரில் அமைந்துள்ளது. இங்கு 3,000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கல்வி
- கலைத் துறை
- அரபு மொழி
- அசாமிய மொழி
- வங்காள மொழி
- போடோ மொழி
- தொடர்பாடல், ஊடகவியல்
- குறைப்பாட்டியல்
- பொருளியல்
- கல்வி
- ஆங்கிலம்
- ஆங்கில மொழி பயிற்சி
- நாட்டுப்புறக் கலைகள்
- வெளிநாட்டு மொழிகள்
- இந்தி
- வரலாறு
- புவியியல்
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
- மொழியியல்
- நவீன இந்திய மொழிகள் (தமிழ், ஒடியா, நேபாளி)[3][4]
- பாரசீக மொழி
- மெய்யியல்
- அரசறிவியல்
- மெய்யியல்
- சமசுகிருதம்
- சமூகவியல்
- பெண்ணியல்
- அறிவியல் துறை
- தொழில் நுட்பத் துறை
- உயிரியல்
- உயிரித் தொழில்நுட்பம்
- உயிரித் தொழில் நுட்பமும், உயிரிப் பொறியியலும்
- வேதியியல்
- கணினியியல்
- மின்னணுப் பொறியியல்
- மின்னணுவியல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
- தகவல் தொழில்நுட்பம்
- இன்ஸ்ட்ருமெண்டேசன் & யூ.எஸ்.ஐ.சி
- கணித அறிவியல்
- இயற்பியல்
- பொருளியல் துறை
- மேலாண்மைத் துறை
- வணிக நிர்வாகம்
- சட்டத் துறை
Remove ads
கல்லூரிகள்
இது தொடங்கப்பட்ட போது 17 கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தற்போது 239 கல்லூரிகளை இணைத்துள்ளனர்.
தரவரிசை
இந்தியப் பல்கலைக்கழகங்களை இந்தியா டுடே தரவரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் குவகாத்தி பல்கலைக்கழகம் 32-ஆம் இடத்தைப் பெற்றது.[5]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads