கோழிக்கோடு நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി),
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.[1]

நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.
Remove ads
நாட்டின் பரப்புகள்

சாமூத்திரியர்கள் ஆண்ட கோழிக்கோடு நாட்டின் பகுதிகளாக குறும்பரநாடு, பையநாடு, ஏறநாடு, பொன்னானி, சேரநாடு, வெங்கிட்டா கோட்டை, மலப்புறம், கப்புல், மண்ணார்க்காடு, கரிம்புழா, நெடுங்காடு, கொல்லங்கோடு, கோட்டுவாயூர் இருந்தன.
துறைமுகங்கள்
புதுப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, பொன்னானி சாமூத்திரிகளின் முக்கிய துறைமுகங்கள் ஆகும்.
வரலாறு
கோழிக்கோடு அரசு கி பி 826-இல் நெடுயிரிப்பு சுவரூபம் எனும் பெயரில் நிறுவப்பட்டது. கோழிக்கோடு நகரம் 1026 நிறுவப்பட்டது. 1766 - 1792-ஆம் ஆண்டுகளுக்கிடையே கோழிக்கோடு அரசு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கோழிக்கோடு அரசை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads